Sunday, November 13, 2016

குலப்பழி



ஜெ

தன் சோதனையின் கடைசியாக அர்ஜுனன் தர்மனை வெட்டித்தள்ளும் இடத்தை வாசித்தபோதுதான் குலப்பழி கொள்ளாதவனுக்கு மீட்பு இல்லை என்று முன்னால் வந்த வரி ஞாபகம் வந்தது

முன்பு ஒருமுறை இதைப்பற்றி நண்பர்களிடம் பேசியிருக்கிறோம். முழுக்கமுழுக்க அப்பாவு அம்மாவுக்கு மகிழ்ச்சி அளிக்கும்படியாக வாழ்பவனால் அவனுக்கான வாழ்க்கையை உண்டுபண்ணிக்கொள்ளவே முடியாது. அவன் வாழ்க்கை ஒரு பெரிய அடிமைவாழ்க்கையாகவே இருக்கமுடியும்

அர்ஜுனனுக்கு யுதிஷ்டிரனிடமிருந்துதான் அந்த விடுதலைத்தேவையாகிறது. அவன் அதை அடைந்தபிறகுதான் மீட்சி அடையமுடிகிறது


மகாதேவன்