Monday, November 14, 2016

குரூரமான யதார்த்தம்



அன்புள்ள ஜெ

ஒவ்வொருவரும் உருமாறுவதை வெண்முரசில் பார்த்துக்கொண்டே தான் வருகிறேன். உண்மையில் வெண்முரசின் அமைப்பே பெரும் இலட்சியங்கள் கனவுகள் ஒருபக்கம். குரூரமான யதார்த்தம் மறுபக்கம் என்று செல்லுவதுதான். ஆனாலும் ஜாதவேதனும் மனைவியும் மாறுவது திகைப்பளித்தது. 

அப்படித்தான் அது நிகழும் என்று தெரிந்திருந்தாலும்கூட அதை வாசிக்கையில் ஒரு பெரிய பதற்றம் வந்து என்னைச்சூழ்ந்துகொண்டது. இப்படித்தான் வாழ்க்கை இருக்கிறது. சாவு ஒருபக்கம். முக்தி இன்னொரு பக்கம். ஒன்று கருப்பு. இன்னொன்று வெள்ளை. இரண்டுமே இரண்டுவகையான உச்சிகள். யதார்த்தம் என்பது குபேரன். பணம்தான்/ அதை வெண்முரசிலே வாசிக்கும்போது பகீர் என்றது



முத்து