Tuesday, November 15, 2016

வற்றாத முலை




அன்புள்ள ஜெ

அர்ஜுனனுக்கு எமன் தண்டாஸ்திரம் அளித்தான் என்பது மகாபாரதத்தில் வரும் கதை. அதை இத்தனைதூரம் விரித்து என்ன செய்யப்போகிரீர்க்ள் என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அந்தக்கதை வந்துசேர்ந்த இடம் அற்புதம். அவன் அளித்தது அன்னையின் வற்றாத முலையை. அதாவது அமுதத்தை. மரணத்தின் தேவனிடமிருந்து அமுதத்தை அஸ்திரமாகப்பெற்று மீண்டு வருகிறான். அந்த திருப்பத்தில் உள்ள கவித்துவம் மனசை மிகவும் நெகிழச்செய்தது


சுவாமி