Friday, November 11, 2016

சர்ரியலிஸம்



அன்புள்ள ஜெ

அர்ஜுனன் முன்பு உலூபியைப்பார்க்கப்போனதும் நாகருலகுக்குச் செல்கிறான். அதுவே ஒரு பயங்கர வசீகரத்துடன் கனவு மாதிரி இருந்தது. அந்த நாகர்களின் உலகத்தை இந்த ஏழுலகப்பயணம் ஞாபகப்படுத்துகிறது. ஒரு பிறழ்ந்த நிலை.

அசிங்கம் ஆபாசம் கீழ்மை என்றெல்லாம் சொல்ல்லாம். ஆனால் எல்லாமே நம் உடலில் இருக்கின்றவை, இங்கே நம்மைச்சூழ்ந்திருக்கின்றவை என்று வாசிக்கும்போது ஒரு பெரிய பதற்றம் ஏற்பட்டது

சர்ரியலிஸம் வந்தபின்னாடிதான் இந்தமாதிரியான எழுத்துக்கு இலக்கியத்தில் என்ன இடம் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். வலி கீழ்மை இரண்டையும் கலந்த இந்த இடம் தமிழில் எழுதப்பட்ட அற்புதமான சர் ரியலிசம்


அருண்குமார்