Friday, August 17, 2018

போர்




சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு அளிக்கும் எச்சரிக்கை நுட்பமானது. போரைப்பார்த்தால் அதிலிருந்து  அவரால் இறுதி வரை மீளமுடியாது. ஆனால் அவரால் அதைப்பார்க்காமலும் இருக்கமுடியாது. அதற்கு அவர் சொல்லும் பதிலும் ஆழமானது. வாழ்க்கையிலுள்ள மிக வீச்சு உள்ல நிகழ்ச்சிகள் எல்லாமே கெட்டவைதான். நாம் வாழ்க்கை முழுக்க ஞாபகம் வைத்திருக்கும் செய்திகளில் பெரும்பாலும் கெட்ட செய்திகளே மிகுதி. ஆனாலும் அவற்றைத் தவிர்க்க முடிவதில்லை. ஏனென்றால் நம் வாழ்க்கையை ஆட்டிப்படைக்கும் பல சக்திகளை நாம் அவற்றில்தான் அடையாளம் காண்கிறோம்

சாரங்கன்