Tuesday, August 7, 2018

யுதிஷ்டிரர்




யுதிஷ்டிரர் போர்க்களத்தில் மறுபக்கம் சென்று பீஷ்மர் துரோணர் ஆகியோரை வணங்கி திரும்பிவருவதாகத்தான் மகாபாரதத்தில் உள்ளது.  அது ஒரு சிறிய செய்தியாகவே சொல்லப்படுகிறது. அப்போது இரு சாராரும் யுதிஷ்டிரரை கோழை, அடிபணியப்போகிறான் என்று வசைபாடுவதாகவும் உள்ளது. அந்த வசைபாடல் மகாபாரதம் உருவாக்கும் ஒரு பெருமையான சித்திரிப்புக்கு எதிரானதாகவே எனக்குப்பட்டது. அதுகூட இடைச்செருகலாக இருக்கலாம் என நினைத்தேன். ஏனென்றால் பாண்டவர்கள் யுதிஷ்டிரரை அப்படி கேவலமாக பேசுவார்களா என்ன? இத்தகைய சின்னச்சின்ன பிசிறுகளை புனைவுகளால் அழகாக ஒருங்கிணைத்து மேலும் கிராண்ட் ஆன ஒரு கதைசொல்லும் முறையை கடைப்பிடித்து வெண்முரசு எழுதப்பட்டுள்ளது. இப்போது யுதிஷ்டிரர் செல்வதும் அவர்கள் அவரை வரவேற்பதும் மிக அற்புதமான சித்திரிப்புகளாக உள்ளன

நரேன்