Monday, August 20, 2018

படைக்காட்சி




அன்புள்ள ஜெ


திருதராஷ்டிரர் காணும் அந்தப் படைக்காட்சி மிகப்பிரம்மாண்டமானது. அதுவரைக்கும் நூல்களில் மட்டுமே காட்சிகளைப் பார்த்துவந்தவன் சஞ்சயன். ஆகவே நேரில் பார்க்கும் காட்சியை அவன் ஒரு காவியமகவே ஆக்கிவிடுகிறான். அந்த பூதக்கண்ணாடி ஒரு அருமையான உருவகம். அவனுடிய மனசு போல. அது வேண்டுவதைக் காட்டுகிறது. அவன் எதை விரும்புகிறானோ அதை மட்டுமே அந்த பூதக்கண்ணாடி காட்டும். போர் அவன் வார்த்தைகளில் காவியமாகவும் நேரடியாக அதில் பங்கெடுப்பவர்களில் அனுபவமாகவும் வரும் என நினைக்கிறேன்.  சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் இதை நீங்கள் பார்த்துத் தான் ஆகவேண்டுமா என்று கேட்பது ஒரு கிளாஸிக்கான கேள்வி


சுரேஷ்பாபு