Friday, August 17, 2018

போர்




அன்புள்ள ஜெ

த்ருதராஷ்டிரரின் மனநிலைமாற்றம் ஆச்சரியப்படுத்துகிறது. அவரே முன்பு சொன்னார். அங்கே நின்றிருக்கும் ஒவ்வொரு வீரருடனும் அவர் இருந்துகொண்டிருக்கிறார் என்றார். அந்த மனநிலையையே அவரிடம் காணமுடிந்தாது. அவருக்கே தெரியும், போரில் அவர்கள் ஜெயிக்கப்போவதில்லை என்று. இருந்தாலும் போரில் வெறிகொண்டு ஈடுபடுகிறார். இந்த மனநிலையைப்புரிந்துகொண்டால்தான் மகாபாரதத்தை நெருக்கமாக உணரமுடியும் என நினைக்கிறேன்

ராஜ்குமார்