Wednesday, August 22, 2018

போர்த்தெய்வம்



அன்பு ஜெமோ சார்,
                       
ஒவ்வொருவருக்குள்ளும்  போர்த் தெய்வம் எழுந்தே விட்டது .
சங்கனாகவும்,உத்திரனாகவும், ஸ்வேதனாகவும்செருகளத்தில் நின்றாடுகிறோம். சஞ்சயனின் போர்க்கள விவரணையில்  திருதாவாக களிக்கூச்சலிடுகிறோம்.
              
தள்ளி நின்று நோக்க, குருதியால் நனைந்த நிணம் வழுக்கும் செருகளத்தை அணுவணுவாய் ரசிக்கும் என்னைக் காண எனக்கே வியப்பாக உள்ளது.
                  
அர்ஜுனன் பீஷ்மரின் பாதங்களை அம்பினால் பணிவதும், அவர் அம்பினால் சென்னி தொட்டு ஆசீர்வதிப்பதும், களத்தில் பார்த்தனின் தொடக்கம் அருமை சார்.


இரா.சிவமீனாட்சிசெல்லையா.