Sunday, August 12, 2018

கிருஷ்ணனின் சதி




ஜெ

அரவானின் களப்பலி கிருஷ்ணனாலேயே உருவாக்கப்படுகிறது. ஆனால் அவர் எதையும் சொல்லவில்லை. பிறரை அவர் நினைப்பதைச் சொல்லவைத்து மெல்ல அவையை அதை நோக்கி தள்ளிக்கொண்டுசெல்கிறார். அரவான் களப்பலி ஆகவேண்டும் என்பது அசுரகுடிகள் அவர்களின் குடியில் அச்சடங்கு இருப்பதைப்பற்றிச் சொல்லும்போதுதான் தெரிகிறது. அவர்கள் அதைச் சொல்வார்கள் என்று அவருக்கும் நன்றாகவே தெரியும். அவர்கள் அதைச் சொன்னதும் அர்ஜுனனுக்கு ஒரு சோதனை வைக்கிறார். அரவான் தன் மகன் அல்ல என்று அவன் சொல்லவேண்டும். சொன்னால் அரவான் பிழைப்பான். ஆனால் அது சாவை விடக்க்கொடிது. அதை அர்ஜுனன் சொல்ல முடியாது. ஆனால் அர்ஜுனனுக்கு மிகப்பெரிய ஆறுதல் உருவாகிவிட்டது. அவனால் அதைத் தவிர்க்கமுடியாது, இரண்டு ஆப்ஷன்களுமே தீமையானவை என நினைக்கவைக்கிறார். அரவான் தானே சொல்ல இளைய பாண்டவர்கள் அதை ஆதரிக்கிறார்கள். வேறுவழியே இல்லாமல் அந்தப்பலி நோக்கிச் செல்கிறார்கள்.

மகேஷ்