Friday, August 31, 2018

திசைதேர் வெள்ளம்



வணக்கம் ஜெமோ,


//திரும்பி வரும்போது தோன்றியது ஒருவேளை நாளையே திசை தேர் வெள்ளம் நாவலைத் தொடங்கிவிடுவேன் என்று. இன்று தொடங்கிவிட்டேன்.//

நாங்கள் பத்தாம் தேதி வரை காத்திருக்க வேண்டுமா.... சத்தியமாக முடியவில்லை... தினமும் அனிச்சை செயலாய் விரல்கள் இன்றைய அத்தியாயத்தை தேடுகின்றன.

வழக்கமாக நீங்கள் இரு வேறு நாவல்களின் நெளிவு சுளிவுகளை உள்வாங்கிக் கொள்ள, அந்த இடைவெளி தேவை என்று சொல்வீர்கள்.

ஆனால், இப்போது ஒரு வகையான நிலையாமை உள்ளத்தை அலைக்கழிக்கிறது.

சித்தம் பிறழ்வதற்குள் நீங்கள் தொடங்கினால் தேவலை!

அன்புடன்
சுவேதா