Thursday, August 9, 2018

தந்தை



அன்புள்ள ஜெ

திருஷ்டதுய்ம்னனும் உத்தரனும் துரியோதனனை தந்தை வடிவாக நினைப்பது என்னை பலவாறாக யோசிக்கவைத்தது. உத்தரனின் தந்தை விராடர் குடிகாரர். ஆகவே தந்தைமேல் அவனுக்கு மதிப்பே இல்லை. தந்தையின் இடத்தில் துரியோதனனை எளிதாக வைத்துவிடுகிறான். பெருந்தந்தைக்குரிய நிமிர்வும் தோரணையும் கள்ளமற்ற அன்பும் கொண்டவன் துரியோதனன்

ஆனால் துருபதர் அப்படி அல்ல. அவர் வேறுவகை. அவர் பெரிய அரசர்தான். ஆனால் அவரிடம் ஒளிந்திருக்கும் வஞ்சம் திருஷ்டதுய்ம்னனை எரிச்சல் படுத்துகிறது. அவன் தந்தையின் சபதத்தை நிறைவேற்றுபவன். ஆனால் தந்தைமேல் உள்ளூர மதிப்பும் இல்லை. ஆகவேதான்தன் விழைவையும் வஞ்சத்தையும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளிக்காமல் நின்றிருப்பதில் தெய்வங்களுக்குரிய நிமிர்வு ஒன்று உள்ளது… அத்தகையவர் பெருந்தந்தை என்பதில் ஐயமில்லை என்று சொல்கிறான். அந்த மனநிலை பூடகமாக வெளிப்படுகிறது


மகாதேவன்