Wednesday, August 8, 2018

கதை




அன்புள்ள ஜெ

தருமர் மூத்தவர்களிடம் ஆசி பெற்றது துரியன் சகாதேவனிடம் நேரம் குறித்தது ஆகியவை எல்லாமே நாம் அறிந்த கதைகள்தான். அவற்றை ஒன்றுடன் ஒன்று முடைந்து ஒரே கதையாக்கி ஒன்றில் இருந்து இன்னொன்று ஒன்றின் விளைவாக ஒன்று என்னும் வண்ணம் எழுந்து வருவதாகக் காட்டியிருப்பது இந்நாவலை துப்பறியும் நாவல்களுக்குரிய வேகத்துடன் வாசிக்கவைக்கிறது. வாசிக்க வாசிக்க கதை விரிந்துகொண்டே செல்கிறது. ஒவ்வொருவரும் இன்னொருவர் மீது கொண்டிருக்கும் அன்பும் கசப்பும் இந்தத்தருணத்தில்தான் தெளிவடைகிறது எனத் தோன்றுகிறது

விஜயகுமார்