Monday, August 20, 2018

சங்கனின் இறப்பு



ஜெ,


சங்கன் கவச ஆடை அணியும்போது தன்னை யானை போல உணர்வதும் அதையே சொல்லிக்கொண்டிருப்பதும் ஆழமான துக்கத்தை உருவாக்கின. அவன் ஒரு பெரிய அளவிலான குழந்தை. அந்தக்குழந்தைத் தனமே அவனை போருக்குக் கொண்டுவருகிறது. பீமனிடம் கொண்டு செல்கிறது. அவன் சாவு அணுகிக்கொண்டிருக்கிறது என்பது பதற வைக்கிறது. ஆனால் அனைவருமே சாகப்போகிறார்கள்தான் என்ற எண்ணமும் ஊடே எழுகிறது


மாதவன்