Monday, February 18, 2019

கருபுகுதல்-3


அன்புள்ள ஜெ

ஜெயத்ரதனின் கருபுகுதல் பற்றி சொல்லப்பட்டிருப்பவை சரியான வாசிப்பு என்றே நானும் நினைக்கிறேன். நாக உலகம் ஆழ்ந்திருக்கிறது. மண்ணுக்குள் இருக்கிறது. மண்ணுக்குள் வேர்வடிவில் தாவரங்கள் இருப்பதுபோல மனிதர்கள் கருவுலகில் இருக்கிறார்கள். எண்ணங்கள் ஆழ்மனதில் இருக்கின்றன. ஆகவே கருவுலகம் நாக உலகமாகக் காட்டப்பட்டுள்ளது

கருவுலகிலிருந்து ஜெயத்ரதன் காணும் காட்சிகளும் முக்கியமானவை. அங்கே ஒரு தெய்வம் இருக்கிறது. அதன்பெயர் உபப்பிராணன், அது முக்கியமான ஒரு க்ளூ என நினைக்கிறேன்

கே. ராதாகிருஷ்ணன்