Saturday, February 2, 2019

நீலம்



பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் உயர்திரு.ஜெயமோகன் ஸார் அவர்களுக்கு அனேக வணக்கங்கள் 🙏 🙏

தங்களுடைய படைப்பில் வெளி வந்தமகாபாரதம் 4 ம் பாகமாகிய"நீலம்" இன்றுதான் படித்து முடித்தேன்.ஒவ்வொரு வரியையும், பக்கத்தையும்...அருள்கூர்ந்து பலமுறைகள் படித்த பின்பே பொருள் புரிந்து கொள்ள முடிந்தது. வர்ணனைகளும்..உவமானங்களின்...வார்த்தைப் பிரயோகங்களும் அற்புதம்!! 

புத்தகம் முழுவதிலும் கதையைவிட ..கவிதைகளையே உணர முடிந்தது.
முழுக்க முழுக்க.. பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.. ஸ்ரீராதை குறித்த வியாக்கியானங்கள்...மிகவும் பிரமிக்கத் தக்கவைகளாகவே இருந்தன!!

"பிரயாகை" வாசிக்கத் தொடங்கும் முன்..."நீலம்" குறித்த பிரமிப்பைத் தங்களிடம் பகிர்ந்து கொள்ளவும்,பாராட்டி மகிழவும் ஆசைப்பட்டேன்.

அனேக வாழ்த்துகள் மற்றும் வணக்கங்களுடன்....

செ.கணேசலிங்கம்