Tuesday, February 12, 2019

சரஸ்வதி



"இதுவரைக்கும் வந்ததுல உச்சம் தொட்ட பல பகுதிகள் இருக்கு, இதயெல்லாம் தாண்டி எப்டி வரப்போவுதுன்னு தெரில"

கெடிலக்கரை ஓர புல்லட் பயணமொன்றில் வெண்முரசில் போர்பகுதிகள் எப்படிருக்கும் என்று என் கேள்விக்கு கடலூர் சீனு சொல்லியது.

குருஷேத்திர அத்தியாயங்கள் ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொண்டு உச்சம் கொண்டு நிற்கின்றன.

அபிமன்யுவின் களப்பலிக்கு ஈடுசெய்த திருப்தி பிருஹத்காயரின் கனிவான முகத்தில்  குடிகொண்டிருக்கிறது. "ஆம்"  என்ற ஒற்றைச்சொல்லில் அனைத்தும் அடங்கிவிட்டது.

மாயப்புன்னகையுடன் தேரோட்டியாய்
வீற்றிருக்கும் விண்ணலந்தோனின் 
கடிவாள விழைவுகளை  விதைத்த சரஸ்வதிதேவியை சாஷ்டாங்கமாய் வணங்கத்தோன்றுகிறது.

-யோகேஸ்வரன் ராமநாதன்