Saturday, February 2, 2019

கர்ணனின் கதை



அன்புள்ள ஜெ

நான் சமீபத்தில்தான் பி கே பாலகிருஷ்ணன் எழுதிய இனி நான் உறங்கட்டும். [தமிழாக்கம் ஆ மாதவன்] நாவலை வாசித்தேன்.நல்ல மொழியாக்கம் இல்லை. மொழி படுத்துகிறது. ஆனாலும் வெய்யோன் முதல் இன்றுவரை வந்துகொண்டிருக்கும் கர்ணனின் வாழ்க்கையின் பின்னணியில் இந்நாவலை வாசிக்கமுடிந்தது வேறு ஒரு அனுபவத்தை அளிப்பதாக இருந்தது. வெண்முரசில் வரும் கர்ணன் பாலகிருஷ்ணனின் நாவலில் வரும் கர்ணனுக்கு மிகவும் நெருக்கமானவராகவேஇருக்கிறார். அவரை நம்மால் அணுக்கமாகப்புரிந்துகொள்ளமுடிகிறது

இணையத்தில் தேடியபோது அந்நாவல் பற்றிய ஒரு குறிப்புதான் வந்திருக்கிறது என்று தெரிந்தது


அ பாலா

இனி நான் உறங்கட்டும் மதிப்புரை