Monday, February 18, 2019

தர்மக்ஷேத்திரம்


ஜெ

புராண உபன்னியாசங்களில் பகவத்கீதையின் முதல்வரியான தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே என்னும் வரியை பலவாறாக விளக்குவார்கள். குருக்ஷேத்திரம் ஒரு போர்க்களம். அது எப்படி என்றவரியைத் தொடர்ந்துஆகமுடியும்? அங்கே தர்மம் ஜெயித்ததனால் அது தர்மக்ஷேத்திரம் என்று சொல்வார்கள். பொதுவாக அதுதான் அனைவரும் அளிக்கும் விளக்கம்

வெண்முரசு குருக்ஷேத்திரத்தை ஒருவகையான வேள்விச்சாலையாக ஆரம்பம் முதலே சொல்லிக்கொண்டிருக்கிறது. அங்கே இறப்பவர்கள் ஆகுதியாகிறார்கள். அங்கே வாழ்பவர்கள் நாள்தோறும் தூய்மையாகிக்கொண்டே செல்கிறார்கள். எல்லாவகையான மயக்கங்களும் அழிந்து மனிதர்கள் அப்பட்டமாக நின்றிருக்கும் இடம் அது

குருக்ஷேத்ரம் பல்லாயிரம் ஆத்மாக்களை விடுவிக்கும் மாபெரும் தவச்சாலையென ஆகியிருக்கிறது.என்றவரியைத் தொடர்ந்து அங்கே என்ன நிகழ்ந்தது என்று சொல்லப்பட்டுள்ளது

அவர்களின் உள்ளம் எல்லைகளை அழித்துக்கொண்டு கலந்தது. கலமே தான் என எண்ணும் மாயையை உதறிய நீர் வானமெங்கும் பரவியது. கொல்லப்படுபவன் கொல்பவனும் தானே என ஆனான். வீழ்ந்தவனில் இருந்து எழுந்து கொன்றவனில் குடியேறி இறங்கினான். நேற்று இன்றுகள், இங்கு அங்குகள், இது அதுக்கள் இயல்பழிந்தன. எங்கும் நிகழும் ஒன்றே அனைத்தும் என நின்றது என்றும் நிகழும் அது.

அப்படி அங்கே பிரம்மம் எழுந்ததனால்தான் அது தர்மக்ஷேத்திரமாக ஆகியிருக்கிறது

சுவாமி