Monday, February 11, 2019

விரித்த கரங்களில்




அன்புள்ள ஜெ

ஜெயத்ரதனின் கதையை தந்தையின் கைகளிலிருந்து விழுந்து உயிர்துறந்தான் என்ற ஒற்றை வரியிலிருந்து கிட்டத்தட்ட ஒருநாவலாகவே மாற்றிவிட்டிருக்கிறீர்கள். அந்தக் கை எங்கிருந்து தொடர்ந்து எங்கே வந்து சேர்ந்திருக்கிறது என்று பார்க்கையில் புனைவின் சாத்தியங்கள் பிரமிப்படையச்செய்கின்றன. நீங்கள் முன்னரே எழுதிய விரித்த கரங்களில் என்னும் சிறுகதையின் விரிவுதான் இந்த மொத்த கதையும் என்னும்போது இதன் விதைகளெல்லாம் உங்கள் மனதில் மிகமிக முன்பாகவே விழுந்துவிட்டிருப்பதை அறியமுடிகிறது

சுவாமி