Monday, March 20, 2017

தண்டகர்






ஜெ

முதற்கனல் நாவலில்தானே தண்டகர் வருகிறார்? சிபிநாட்டில் அவர்தான் பீஷமருக்கு யயாதியின் முகத்தைக் காட்டுகிறார். இப்போது அவர் வந்து மீண்டும் யயாதியின் கதைதொடங்குகிறது. நான்குவருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 15000 பக்கம் கடந்து அந்தக்கதை தொடர்கிறது. அந்த நாகர் அழியாமலிருக்கிறார். மகாபாரதம் உருவாக்கும் மலைப்பை கடந்துசெல்கிறது வெண்முரசு

மகாதேவன்