Monday, March 13, 2017

குரூரமும் பெரும்பாசமும்





ஜெ

ஹுண்டனின் கதாபாத்திரம் ஜராசந்தனை ஞாபகப்படுத்துகிறது. இருவரும் பழங்குடிகள். இருவருக்குமே குரூரமும் பெரும்பாசமும் சரிசமானமாகக் கலந்து உள்ளன. ஆச்சரியமான விசயம் இது

ஹுண்டன் உறைந்து இருந்தபோது குரூரமானவனாக இருக்கிறான். விடுதலை அடைந்ததுமே அவன் அன்புகொண்டவனாக ஆகி அனைவரையும் விடுதலைசெய்கிறான். அந்த உளவியல் மிக நுட்பமானது
மகாதேவன்