Tuesday, March 14, 2017

யாத்திரை






அன்புள்ள ஜெ

நகுஷன் அசோகசுந்தரியுடன் உறவுகொண்டபின்னர் மயங்கும்போது அவன் கனவுகாண்கிறான். அதில் அவன் அர்ஜுனனாகப் படுத்திருக்க பாஞ்சாலி வெட்டவருகிறாள். அர்ஜுனன் பாஞ்சாலியை இதேபோல கற்பழிப்பைத்தானே செய்தான்?

அதன்பின் அவன் விழித்துக்கொண்டு ஒரே பெண்பித்தனாக திளைக்கிறான். அவனுடைய ஆழ்மனதை அதைக்கொண்டு புரிந்துகொள்ளமுடிகிறது என்பது மட்டும் அல்ல, அவன் கொண்ட எந்த அம்சம் வளர்ந்து பின்னாடி அர்ஜுனனாக ஆகியது ஏன் அர்ஜுனன் பெண்பித்தனாக இருக்கிறான் என்பதெல்லாம்கூட புரிகிறது.

இந்த நுட்பமான இடத்தை வந்துசேர்வதற்கு ஒரு யாத்திரை தேவை. அதுதான் வென்முரசின் அழகு

பாண்டியன்