Wednesday, March 29, 2017

புலிகளைப்பற்றிய வர்ணனை





அன்புள்ள ஜெ,
புலிகளைப்பற்றிய வர்ணனை வழியாக அவற்றை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கவைக்கிறீர்கள். குறிப்பாக புலிகளை ஓநாய்கள் எதிர்கொள்ளும் காட்சியில் புலிகள் ஓநாய்கள் இரண்டின் உடல்மொழியும் மிகக்கூர்மையாக வெளிவந்திருந்தன. ஓநாய்கள் தனியாக இல்லை. பெரிய எண்ணிக்கையில் இருந்தன. அவற்றை எதிர்கொள்ள புலிகளால் முடியாது. ஓநய்களின் நடத்தையும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அவை காட்சியாக இருப்பதனால்தான் அவற்றை நாம் இவ்வளவு கோணங்களில் கூர்ந்து யோசிக்கிறோம். கனவிலே காண்பதுபோல ஆகிவிட்டன அவை

எஸ்.மாதவன்