Friday, March 3, 2017

கதைகள்



ஜெ

மாமலர் கதையின் தீவிரமான உத்வேகத்துடன் பெருகிச்செல்கிறது. கதையிலிருக்கும் தீவிரம் மெய்சிலிர்க்கவைக்கும் பல இடங்களைக்கூட எளிதில் கடந்துசெல்ல வைத்துவிடுகிறது. பலசமயம் ஒரே அத்தியாயத்தில் நிறையவே கதை ஓடிச்சென்றுவிடுகிறது. ஆகவே நினைவில் நிறுத்தவே முடியவில்லை. மிகச்செறிவான பக்கங்களாக உள்ளன.

புரூரவஸ் காமத்தால் அறத்தை மறந்து திளைப்பதும் அமைச்சர் நட்வடிக்கை எடுப்ப்தும் அந்த அவை நிகழ்வுக்ளும் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தன. ஒவ்வொருநாளும் காலையில் அடுத்து என்ன என்று வாசிக்கவைத்தன. மகாபாரதக்கதை பலமடங்கு விரிவானதாக ஆகிவிட்டது இந்தக்கதைசொல்லும்ம்றை வழியாக

ராஜகோபால்