Thursday, March 30, 2017

அமரகாதல்





அன்புள்ள ஜெ

தேவயானியும் சுக்ரரும் கடுமையானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசியல் சூழ்ச்சி தெரியவில்லை. ஆகவே கசனைக்கொல்ல ச்செய்யப்பட்ட சதிகளை அவர்களால் ஊகிக்க முடியவில்லை. அதேசமயம் அவர்கள் ஆழமான நிம்மதியில்லாமையையும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள்.  கசனுக்கும் தேவயானிக்கும் இடையிலான உறவில் தேவயானி எப்படியெல்லாம் கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் அடைகிறாள் என்பது நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மிகவும் கொந்தளிப்பான ஒரு காதல்கதை இது. அவளுடைய பெருங்காதலை வாசிக்கும்போது மிகுந்த மனநிறைவு உருவாகிறது.

ஜெயராமன்