Tuesday, March 14, 2017

அர்ஜுனனாக






அன்புள்ள ஜெ

முதல்வாசிப்பில் தவறவிட்டுவிட்டேன். மீண்டும் ஒருமுறை வாசித்தபோதுதான் ஆ என கண்டுகொண்டேன். பூருரவஸ் பீமனாக உணர்வதைப்போல நகுஷன் ஆழத்தில் அர்ஜுனனாக உணர்கிறான். அவன் காணும்கனவில் அவனுடைய முதல் பெண், அப்புறம் பாஞ்சாலி, அப்புறம் உலூபி, சித்ராங்கதை ஆகியோர் வரிசையாக வருகிறார்கள்.

ஆச்சரியம்தான் . இதை எப்படி விட்டோம் என எண்ணிக்கொண்டேன். இவன் இந்திரனை வெல்பவன். இந்திரனின் மகனாகத்தானே இவன் இருக்கமுடியும்?

மனோகர்