Friday, March 10, 2017

ஒளி


ஜெ,

நகுஷன் மீண்டும் குருநகரியை ஜெயிக்கும் இடம் அபாரமானது. அவன் வாரிசுரிமையால் நகரத்தை அடையவில்லை. ஷத்ரியனாக தன் தோள்வலிமையால் அடைந்தான் என நிரூபிக்க விரும்புகிறான். அந்த மனநிலையை கொண்டே அவனை நாம் புரிந்துகொள்ள முடிகிறது

அதேபோல அமைச்சர் உடனடியாக விடைபெறுவதும் யதார்த்தம். அதிகாரம் அப்படித்தான். அது கைமாறினால் பழையவர் உடனடியாக விலகிவிடவேண்டும். பலசமயம் பிஸினஸில் அப்படி ஆவதில்லை. என் அப்பாவுக்கும் எனக்கும் அடிதடி வரை போயிருக்கிறது

நம் உயிர் உடலை அமைப்பதுபோல நாம் அதிகார அமைப்பை நம்மைச்சூந்து அமைக்கிறோம் என்னும் வரி சிறப்பு

வெண்முரசின் அழகு என்பதே இந்தமாதிரியான அன்றாட வாழ்க்கை யதார்த்தங்கள் வந்துகொண்டே இருப்பதுதான்


எஸ். ஆர். ராமசுப்ரமணியம்