Tuesday, October 16, 2018

புண்




மருத்துவரான சுதேஷ்ணர் அபிமன்யூவின் நாடியை பிடித்து நோக்கி அவனுடைய உடலுக்குள் உள்ளத்தில் ஓர் ஆழமான புண் உள்ளது என்று சொல்லும் இடம் எனக்கு ஓர் அதிர்ச்சியைத்தான் உருவாக்கியது. ஏனென்றால் நான் அபிமன்யூவின் கொந்தளிப்பையும் ஆவேசத்தையும் பார்த்து அவன் கொஞ்சம் கூடுதலாகவே செயல்படுகிரான் என்ற நினைப்பில் இருந்தேன். ஹைப்பராக்டிவ் குழந்தை அவன் என்பது ஆரம்பத்திலேயே தெரிகிறது. ஆனால் இப்போது இந்த போரில் செத்துப்போவதே ஒரே வழி என்று நினைத்து அவன் நடந்துகொள்வதாகவே தோன்றுகிறது. அதற்கான காரணம் அவன் உள்ளத்திலுள்ள புண். ஆரம்பம் முதலே வெண்முரசில் சொல்லப்படாமலேயே இந்தப்புண் வந்துகொண்டிருக்கிறது

மனோகர்