Monday, October 29, 2018

துரியோதனனின் சொற்கள்




அன்புள்ள ஜெ

துரியோதனனின் சொற்கள் என் மனதை நெகிழச்செய்தன. அவனால் இப்போது மட்டும்தான் உணரமுடிகிறது உறவு என்றால் என்ன என்று. ஏனென்றால் உறவின் அருள் அவனுக்குப் பரிபூரணமாக இருந்தபோது அதைப்பற்றி தெரியாமலேயே இருந்துவிட்டான். வாழ்க்கையில் தம்பியர் எதுக்குமே பொருளில்லாமலும் ஆகிவிட்டது. ஆனால் அவர்களில் ஒருவர் இறந்ததுமே முழுமையாகவே நிலைகுலைந்துவிட்டான். அவனுக்கு இன்றைக்கு அஸ்தினபுரியோ பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்தியாக ஆவதோ ஒரு பொருட்டாகவே தெரியாது என நினைக்கிறேன். அவன் மனதில் இருப்பதெல்லாம் தம்பியரை இழந்த துக்கம்தான். அந்த இழப்புக்கு எதை சமானமாக வைத்தாலும் போதாது என்றுதான் அவன் உணர்வான் என்று தோன்றுகிறது

ரவிச்சந்திரன்