Saturday, October 27, 2018

அனிலை




ஜெ

அனிலை அம்பையின் இன்னொரு வடிவம் என்பதை தெளிவாகவே உணர முடிந்தது. அதன்பின் அனைத்து ஆற்றல்களையும் இழந்து பீஷ்மர் தலைகவிழ்ந்துதான் ஆகவேண்டும். அந்தக்குதிரையின் கன்னிமைத்தன்மையும் தாய்மையும் வெறியும் ஒரே சமயம் அம்பையைக் கண்முன் கொண்டுவந்தன. போரில் அது கொற்றவைக்குச் சமானமான வேகத்துடன் இருக்கும் காட்சி மெய்சிலிர்க்கச்செய்தது. ஒரு பெரிய கான்வாசில் இப்படி ஒரு துளி வழியாக நாவல் சொல்லப்படும்போது அதன் வீச்சு வேறொன்றாக ஆகிவிடுகிறது.

ராஜ்