Friday, October 26, 2018

சாத்யகி



ஜெ

அவ்வளவு பேரழிவுக்குப்பின்னரும் சாத்யகி மீண்டும் அம்பும்வில்லுமாக கிருஷ்ணனின் சேவைக்காக வந்து நிற்குமிடம் ஓர் உச்சம் என நினைக்கிறேன். அவனுடைய கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் உண்மையானவை. ஆனால் அவன் வந்துசேர்ந்துள்ள இந்த இடமும் கூட எந்தவகையிலும் குறைவானவை அல்ல. அந்தக்கொந்தளிப்புகளை அவன் அடையவில்லை என்றால்தான் அது பிழையானது. அந்தக்கொந்தளிப்புகளை அடைந்தபின்னர் அவன் இந்த இடத்துக்கு வந்தான் என்பதில்தான் உண்மையான தீவிரமான அர்ப்பணிப்பு உள்ளது என நினைக்கிறேன்.


கே.சாந்தி