Wednesday, October 31, 2018

மண்ணும் விண்ணும்



ஜெ

பாண்டவர் சபையில் நடக்கும் போர் ஆலோசனையில் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். நான் இதைச் சரியாகக் கவனித்தேனா இல்லை என் கற்பனையா என்று தெரியவில்லை. ஷத்ரியர்கள் மாண்ட செய்தி வந்தபோது அவர்கள் விண்புகுந்தார்கள் என்று வாழ்த்துக்குரல் எழுகிறது. அசுரர்களும் பிறரும் மாண்ட செய்தி வரும்போது அசுரர்கள் அவர்கள் மண்ணுக்குள் வாழ்வார்கள் என்ற வாழ்த்துக்குரலை எழுப்புகிறார்கள். இந்த வேறுபாடு அவர்கள் நடுவே இருந்துகொண்டே இருக்கிறது. இது ஒரு முக்கியமான விஷயம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஏற்கனவே மகாபலி பற்றியெல்லாம் வெண்முரசில் வரும்போது அவர்கள் வேர்கள் போலவும் புதைந்து முளைக்கும் மரங்களைப்போலவும் மண்ணுக்குள் வாழ்கிறார்கள் என்ற பெரிய சித்திரம் அளிக்கப்பட்டது


டி.கார்த்திகேயன்