Tuesday, October 23, 2018

வெண்முரசு கூடுகை




அன்புள்ள ஆசிரியருக்கு,
         

அக்டோபர் மாத சென்னை வெண்முரசு கூடுகையில், ராஜகோபால் ,சொல்வளர் காட்டில் எப்படி ஆரண்யங்கள் உருவானது என்பது பற்றி சிறப்பாக உரையாற்றினார்.மூல நூலில் எப்படி கூறப்பட்டுள்ளது அதனை வெண்முரசில்  எவ்வாறு எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை விரிவாக கட உபநிஷத்து சுலோகங்களை வாசித்து அதன் தமிழ் அர்த்தத்தையும் கூறி விளக்கினார். இருபது பேர்களுக்குமேல் சூழ அமர்ந்து கேட்டது ஆரண்யங்களில் நடந்த விவாதங்கள் இப்படித்தான் நடந்திருக்கும் என்பதை உணரவைத்தது.கூடுகையை ஒருங்கிணைத்து, தேநீர் நொறுக்குத்தீணியுடன் உரையாடலுக்கு சுவை சேர்த்த நண்பர்களுக்கு நன்றி.அடுத்த மாதத்திற்காக காத்திருக்கிறேன்.
        

கா.சிவா