Wednesday, January 30, 2019

குந்தி எனும் மந்திரம்




அன்புள்ள ஜெ

குந்தி உள்ளே நுழையும்போது அவளிடம் கர்ணன் சொல்லும் வரி அப்போது பொதுவான ஒரு வரியாகவே இருந்தது

அரசகுடியினர் பெருங்கவிஞன் ஒருவனின் கவிதைச்சொல்போல சொல்லில் செறிவுகொண்டவர்கள் என்று ஒரு சூதர்சொல் உண்டு. தாங்களோ ஓர் ஊழ்கநுண்சொல்லின் ஆழம் கொண்டவர்கள். இப்போது அச்சொல் மேலும் ஒலியின்மை நோக்கி சென்றுள்ளது

ஆனால் அவள் விடைபெற்றுச் செல்லும்போது அந்த வரி பலமடங்கு அர்த்தம்கொண்டதாக ஆகிவிட்டது. அவள் எத்தனை ஆழமானவள் அவளுக்குள் என்னென்ன ஓடுகிறது என்று பார்க்கையில் அவள் ஒரு மூலமந்திரம் என்றே தோன்றுகிறது. ஸ்ரீம் என்பதுதான் துர்க்கையின் மந்திரம். துர்க்கையின் மந்திரம் தான் இவளுக்கும். இவளுடைய சூழ்ச்சி கோபம் அன்பு அரவணைப்பு விளையாட்டு எதையும் நம்மால் முழுமையாகப்புரிந்துகொள்ளவே முடியாது. தியானிக்கத்தான் முடியும்

குந்தி எவ்வளவு ஆழமாக கர்ணனைப்புரிந்து வைத்திருக்கிறாள். அவனையே நினைத்திருந்ததனால் மட்டும் அல்ல. அவள் தேவி என்பதனால்தான்

ஸ்ரீனிவாஸ்