Wednesday, January 23, 2019

பீஷ்மபீடம்


அன்பின் ஜெ,

வணக்கம்!.

நுண்ணிய விவரணைகளின் வலைப்பின்னல்களால் ஆனது வெண்முரசு
என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமானபடி உள்ளது.

அங்கநாட்டரசர் கௌரவர் தரப்பு அவைக்கூடலுக்கு வந்துசேருகிறார், அவருக்கான பீடத்தை அடையாளம் காட்டுவது அஸ்வத்தாமன், அதுகாறும் அவை நடவடிக்கைகளில்
முன்னிற்க்கும் பூரிசிரவஸ் அச்செயலை செய்யவில்லை, அவ்வாறு நடந்திருந்தால் இடக்கையால் தலைதொடாது வாழ்த்துரைத்த துரோணர் அப்போதே 
சினங்கொண்டு எழுந்து பீஷ்மரின் பீடத்தில் அங்கர் அமரமுடியாமல் செய்திருப்பார்.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.