Tuesday, January 29, 2019

நஞ்சு



ஜெ

கர்ணன் குந்தியிடம் சொல்லும் இடம் இது

ஒரு போர் எந்த நஞ்சினால் தொடங்கப்பட்டதோ அது முற்றழியாமல் ஒருபோதும் முடிவடையாது. இப்போரை இன்று இவ்வண்ணம் சில சூழ்ச்சிகளினூடாக நிறுத்துவோமெனில் அந்நஞ்சு எஞ்சியிருக்கும். ஆழத்தில் புளித்து நுரைத்து பொங்கும். என்றேனும் மேலும் விசை கொண்ட ஒரு பெரும்போர் இங்கே எழும். இது உடலில் ஊறிய நஞ்சு. கட்டியென்று ஆகி பழுத்து சீழாகி உடைந்து வெளியேறட்டும். உடல் நலம்பெற அது ஒன்றே நாம் செய்யக்கூடியது

இந்தப்போர் ஒரு பெரிய அறுவை சிகிச்சை. இங்கே எல்லா கட்டிகளும் அறுத்து மருந்திடப்படுகின்றன. அப்படிப் பார்த்தால் மொத்த வெண்முரசின் கதையே நூற்றுக்கணக்கான கட்டிகள் இப்படி தலைமுறை தலைமுறையாக பழுத்து சீழ்கட்டிக்கொண்டே இருப்பதுதான். இதுவரை சொல்லப்பட்ட கதைகளுடன் ஒவ்வொருநாளும் போரில் புதியகதைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. எத்தனை கோபங்கள், வஞ்சினங்கள். எல்லாமே இந்த 18 நாட்களில் தீரப்போகின்றன

பாஸ்கர்