Sunday, January 20, 2019

அனல்



அன்புள்ள ஜெ

அர்ஜுனைன் மருத்துவநிலை வாசலில் யுதிஷ்டிரர் நின்றிருக்கும் காட்சியில் அவருடைய துக்கத்தையும் அலைக்கழிப்பையும் வாசித்துக்கொண்டிருக்கும்போது அங்கே சிகண்டி வரும் காட்சி சற்று பொருந்தாமல் இருக்கிறது என்று தோன்றியபோதே அவர் யுதிஷ்டிரரிடமிருந்து தீ வாங்கிச்செல்லும் சித்தரிப்பு வந்தது. பொட்டில் அடித்ததுபோல் இருந்தது. யுதிஷ்டிரரின் அனல்தான் அங்கே அத்தனைபேரையும் எரிக்கிறது. அத்தனைபேருக்கும் தந்தையாக நின்று அவர்தான் எரியூட்டிக்கொண்டிருக்கிறார். அந்த அனலை அப்போது விஸ்வரூபமாகக் கண்டேன்

சுவாமி