Sunday, January 27, 2019

கொடை


ஜெ

வெண்முரசில் கர்ணன் சொல்லும் வரி இது.

உயிர் அளிப்பது தற்கொடைகளில் உச்சம் என்பர். அதற்கும் மேல் புகழை அளிப்பது. அதற்கும் மேல் பெருங்கொடை என ஒன்றுண்டு என்று இப்போது அறிந்தேன். வீடுபேற்றை, கொடிவழியினரின் வாழ்க்கையை அளிப்பது

கர்ணனின் உண்மையான கொடை என்ன என்று சொல்லும் அழகான வரி. அவன் அளித்தது அவனுக்கு இங்கே கிடைக்கக்கூடிய அனைத்தையும் மட்டும் அல்ல. அவன் எதையெல்லாம் இழக்கக்கூடுமோ அனைத்தையும்தான். ஆகவேதான் அவன் பெரும் கொடையாளி


இத்தகைய பெரிய வாழ்க்கைகள் கிளாஸிக்குகளில்தான் உண்டு. ஆகவேதான் கிளாஸிக்குகள் தேவையாகின்றன


செந்தூரன் சுப்ரமணியம்