Monday, January 28, 2019

துயில்



ஜெ

சிலநாட்களுக்கு முன் ஓர் அனுபவம் எனக்கு. காலை எழுந்ததுமே என் முதல் எண்ணம் முந்தியநாள் இரவிலே நான் நினைத்துக்கொண்டிருந்ததன் தொடர்ச்சி. நடுவே ஏழுமணிநேரம் தூங்கியிருக்கிறேன்

அதை எங்கேயோ வாசித்தேனே என்று தேடித்தேடி கடைசியில் கண்டுபிடித்தேன். அது வெண்முகில்நகரத்தில் வரும் வரி


துயில் வந்து மூடும் இறுதிக்கணம் எஞ்சிய சினம்பூசப்பட்ட எண்ணம் அப்படியே விழிப்பின் முதல்கணத்தில் வந்து ஒட்டிக்கொள்வதன் விந்தையை ஒவ்வொருமுறையும் எண்ணிக்கொண்டான். நாளெல்லாம் எண்ணங்களுடன் அன்றாடச்செயல்களுடன் அத்தனை உரையாடல்களுடன் அந்தச்சினமும் உடனிருந்தது.

ஒரு பெரிய கதையைச் சொல்லிச்செல்லும் நாவலில் இவ்வளவு சிறிய நுட்பமான அன்றாட விஷயம் வந்திருக்கிறது. மட்டுமல்ல அதை நான் ஞாபகம் வேறு வைத்திருக்கிறேன். வெண்முரசு காவியமாக ஆவது இத்தகைய சின்னச்சின்ன வரிகளின் வழியாகத்தான்

எம்.ராஜன்