Saturday, January 26, 2019

குந்தியும் கர்ணனும்



ஜெ


குந்தி கர்ணன் சந்திப்பு சோகத்தில் முடியும் என நான் நினைத்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் வெல்லமுயன்று ஒருவரை ஒருவர் தோற்கடித்துக்கொண்டார்கள் என்ரு நீங்கள் வேறு எங்கோ எழுதியிருந்தீர்கள். ஆனால் வெண்முரசில் அபப்டி நிகழவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு மகிழ்ந்து நிறைவுடன்தான் செல்கிறர்கள். இது நீங்கள் எண்ணியது அலல என நினைக்கிறேன். நீங்கள் எழுதிச்சென்றபோது அவ்வாறு அமைந்துவிட்டது என்று தோன்றியது. ஆனால் இயல்பாக அழகாக அமைந்திருக்கிறது. மகாபாரதத்தின் பல்வேறு வெர்ஷன்களை வாசித்திருக்கிறேன். இதுவரை இம்மாதிரி வாசிக்கநேர்ந்ததில்லை.


சரவணக்குமார்