Thursday, January 31, 2019

குந்தியின் முகம்




அன்புள்ள ஜெ

குந்தி கர்ணன் சந்திப்பு நான் எதிர்பார்த்ததை விட பல இடங்களில் சென்று நிறைந்தது. அதை உணர்ச்சிமிகுந்த ஒரு சந்திப்பாக நான் நினைத்திருந்தேன். கூடவெ கர்ணனின் வாக்கை பெற்றுக்கொள்ளும்போது குந்திசெய்யும் தந்திரங்களும் வெளிப்படும் என்று நினைத்தேன். ஆனால் கர்ணனின் வெவ்வேறு ஆழங்கள் பேச்சு வழியாக வெளிப்படுகின்றன. கர்ணன் யார் என்பதை இத்தனை நெருக்கமாக இதற்குமுன் உணர்ந்ததே இல்லை. அவன் சூரியனைப்போல குற்றமே இல்லாத ஆணழகு கொண்டவன். மலர்களைப்போல பெண்கள் அவனை நினைத்து ஏங்குவார்கள். அணுகவே முடியாது. இன்னொருவனுக்கு இடம்கொடுக்கும் மனமே இல்லாதபடி நிறைவான ஆண் அவன் .ஆகவே அவன் self cenrterd ஆக இருக்கிறான். ஆகவேதான் அவனால் பிறரை நினைக்கவே முடியவில்லை. அவனைப்பற்றி அத்தனைகூர்மையாக குந்தி சொல்லும் இடம் ஆழமானது. இதுவரை நாம் வாசித்த அத்தனை கர்ணனைப்பற்றிய சித்திரங்களையும் இதை வைத்து முழுமையாக்கிக்கொள்ளவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

பாஸ்கர் எம்