Sunday, September 6, 2020

வாழ்வு

 


அன்புள்ள ஜெ

எல்லாரும் தன் கம்ப்யூட்டரில் பாஸிட்டிவான விஷயங்களை எழுதி வைத்திருப்பார்கள். நான் ஒரு நெகெட்டிவான விஷயத்தை எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அது எனக்கு மிகவும் பாஸிட்டிவான எனர்ஜியை அளிக்கிறது. என் ஒவ்வொரு நாளையும் ஊக்கத்துடன் வாழச்செய்கிறது

இறப்பு என்பது மீண்டெழல் இல்லாமை. திரும்பி வராத பயணங்களும் மீட்சியில்லாத உளவீழ்ச்சிகளும் சாவே.

இதெல்லாம் சாவென்றால் வாழ்வென்ற்ய் சொல்வது என்ன? எந்த பயணமும் மீள்வதற்கான வழியுடன் இருக்கவேண்டும். எந்த உளநிலையிலும் திரும்பிவரும் வழி திறந்திருக்கவேண்டும். வாழ்வேன் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்

சந்திரசேகர்