Tuesday, September 1, 2020

சபைகளில்

 


அன்புள்ள ஜெ

வெண்முரசில் அவை மரியாதைகளைப் பற்றி நானும் யோசித்துக்கொண்டிருந்தேன். அவைமரியாதைகள் இரண்டுவகையானவை. புதிதாக வந்த ஒருவர் தனக்கு இடம்வேண்டும் என நினைக்கிறார். பழையவர்கள் இடம் கொடுக்கமுடியாது என்கிறார்கள்.

அதேபோல சமானமான இருவர் தங்களுக்குள் ஒருவர் கொஞ்சம் மேலே என்று காட்ட விரும்புகிறார்கள். இந்தப்பூசலும் போய்க்கொண்டே இருக்கிறது. அவனை எனக்குச் சமானமாக எப்படி நிறுத்தலாம் என்பதுதான் மொத்த சபைமரியாதைச் சண்டைகளிலும் ஒலிக்கும் குரலகா உள்ளது.

அதைச்சமாளிக்க பலவழிகளை கடைப்பிடிக்கிரார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுது என்று வகுக்கிறார்கள். ஒரேசமயம் பலர் உள்ளே நுழையும்படி வாசல்களை அமைக்கிறார்கள். ஆனால் இது அன்றுமுதல் இன்றுவரை உள்ள பிரச்சினைதானே? இன்றைக்கும் போஸ்டரில் பெயர்போடுவது மேடையிலே அமரச்செய்வதுதானே அரசியலில் மிகப்பெரிய பிரச்சினை?

ஆனந்த்குமார்