Wednesday, March 4, 2015

பூரிசிரவஸின் கதை



ஜெ,

பூரிசிரவஸ் என்ற பெயரையே இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அவரது கதாபாத்திரம் உண்மையில் மகாபாரதத்தில் முக்கியமானதா என்ன? அவரது குணச்சித்திரம் மகாபாரதத்தின் கதையை தீர்மானித்ததா? இல்லை பிற கதாபாத்திரங்களை கூர்ந்து பார்க்கும் இன்னொரு சின்ன கதாபாத்திரம் தேவை என்பதற்காக இவரை உருவாக்கினீர்களா?

ஒரு தகவலுக்காகவே கேட்டேன். ஏனென்றால் இதிலுள்ள அவரது கதாபாத்திரம் கொஞ்சம் கொஞ்சமக தெளிவாகிக்கொண்டே வருகிறது. ஒரு பெரிய அரசதந்திரியாகவும் இளங்காதலனாகவும் அவரைக் காட்டிவருகிறீர்கள்

மேலும் இக்கதாபாத்திரம் வளரும் என்றால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்

சண்முகம்