அன்பு ஜெ ,
      
 இமைக்கணத்தில், பல்வேறு நிலையில், முதுமையின் தன்னுணர்வுகள் வெளிப்படுகின்றன.பல உளவியல் சார்ந்த கருத்துக்கள் வாழ்வியலின் பல்நிகழ்வுகளை ஒப்புநோக்க வைக்கின்றன. சொல்லொன்னா கருத்துகளும் , தங்களின் படைப்பூணூடே கடந்து செல்ல முடிகிறது.
            
முன் பதிவுகளிலே இதைப்பற்றி பரக்க பேசியுள்ளீர்கள்.யயாதியின் ஊடே. முதுமையென்பது உடலுக்கு மட்டுமானதல்ல.  மெய்யறிவால் , அனுபவத்தால் , தன்னிளையோருக்கு சொல்லும் நிலையிலிருப்பது.ஆனால் பீஷ்மரின் வாக்காக , முதியவர்களை குழவியென எள்ளுகிறது இளையுலகம் என்றும் குறித்துள்ளீர்கள்.
              
கர்ணனது நினைவாக அணிகலைந்து காடேகும் நிலையில் , ஆடியில் தன்னுரு பார்த்து , அவயமென்று அணிகலளையே நோக்கியதை குறிப்பதும் , பலரின் திடுக்கிடலேயாகும்.மானிடயிருப்
அன்புடன்,
செல்வி அழகானந்தன்
கடலூர்.
கடலூர்.

