Wednesday, July 29, 2020

இடும்பனின் வம்சம்


அன்புள்ள ஜெ

வெண்முரசை ஒட்டுமொத்தமாக வாசிக்கவேண்டும். இன்று முழுக்கதையும் துளித்துளியாக தெரிந்துவிட்டபிறகு பின்னால் சென்று வாசிக்கையில் வேறுவேறு கதைநுட்பங்கள் தெரியவரும். இடும்பன் கொல்லப்பட்ட காட்சியை புரட்டி வாசித்தேன். பீமனால் இடும்பன் கொல்லப்பட்டான் என்பது ஒரு கதைவடிவமாக இருந்தாலும் இன்றைக்கு வாசிக்கையில் இடும்பன் ஒரு காலகட்டத்தின் காட்சி என்பதுதோன்றுகிறது. அவன் அழிவது அந்தக்காலகட்டத்தின் அழிவு. அதன்பின் அவன் குடி அரசாங்கமாகிறது. கிருஷ்ணனின் வேதம் அவர்களை ஷத்ரியர்களாக ஆக்குகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் பாரதவர்ஷத்தையே ஆட்சிசெய்கிறார்கள். இந்த பரிணாமம் நிகழ்வது இயல்பான ஒரு மாற்றத்தால்- இடும்பன் கொலையால். இடும்பன் இருந்திருந்தால் இது நிகழ்திருக்காது. ஆனால் கடோத்கஜனின் பார்பாரிகனின் இயல்பில் இடும்பன் இருந்துகொண்டும் இருக்கிறான்

மகாதேவன்