Monday, July 20, 2020

முதல் கடிதம்



அன்புள்ள ஜெ,

இது எனது முதல் கடிதம். நான் அமர் சித்திரக் கதை மகாபாரதத்தில் இருந்து மோகன் கிசாரி கங்குலியின் மகாபாரதம் வரை ஆங்கிலம் தமிழ் என பல்வேறு புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் வெண்முரசை படிக்கும்போது நான் அதில் வரும் பாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறேன். வெண்முரசு தந்த மன எழுச்சிகளை வேறு எந்த புத்தகமும் தந்ததில்லை. 

நாளை முதல் இமைக்கணம் நாவலை மூன்றாம் முறையாக படிக்கலாம் என்று இருக்கிறேன். அதிலும் குசேலர் கதையை ஐந்து முறை ஏற்கனவே படித்திருக்கிறேன். ஆறாவது முறையாவது கண்ணீர் வராமல் படிக்க முடியுமா எனப் பார்க்கிறேன்.
திசை தேர் வெள்ளம் முதலான நாவல்களின் செம்பதிப்பு எப்போது வெளிவரும்.

உங்களுக்கு மட்டுமல்ல எங்களையும் வெறுமை சூழ்ந்து இருக்கிறது.

நன்றி
மோகன்

அன்புள்ள மோகன். 

மற்ற நாவல்களின் செம்பதிப்புகள் என்னுடைய பங்களிப்புக்காக காத்திருக்கின்றன சீக்கிரமே வெளிவரும்
ஜெ