Friday, July 24, 2020

கல்வி


அன்புள்ள ஜெ, 

இனிய ஆச்சரியங்களில் ஒன்று வெண்முரசில் நாம் வாசித்து மகிழ்ந்த ஒரு பகுதி நமக்கே வாட்ஸப்பில் எவரோ அனுப்பி வந்துசேர்வது 

கல்வியால் சற்றேனும் வளர்பவரே கற்க முடியும் என்று இன்று அறிந்தேன். அடுத்த அடி வைத்த பின்னரே முந்தைய அடியை நாம் உண்மையில் புரிந்துகொள்கிறோம். திரும்பிநோக்கி அறிகையிலேயே அறிந்தவை செறிந்து அறிவென்றாகின்றன [மாமலர்] 

என்றவரி இன்று வந்தது. ஆச்சரியமான வரி. கல்வியில் ஓர் இடத்தில் நின்றுவிட்டவர்கள் அதுவரை கற்றவற்றையும் இழந்துவிடுவார்கள். கல்வியில் நாம் எதை கடந்தோமோ அதைத்தான் நாம் புரிந்துகொள்கிறோம். நாம் அதில் உழல்வது வரை அதை புரிந்துகொள்வதே இல்லை.

 

ராம்