Thursday, July 23, 2020

வெண்முரசின் உன்மத்தம்- சந்தோஷ்



அடுத்து, எனக்கு கிடைத்திருப்பது கனவுகள். மிகப்பெரிய கனவுகள். வெண்முரசின் நிலங்கள், வர்ணனைகள் திறந்துவிடும் சாத்தியங்கள் அசாத்தியமானவை. கழுகுப்பார்வையில் துவாரகையை பார்க்கமுடிந்த என்னால், புரவியோடிய அதன் ஒவ்வொரு தெருவையும் நினைவிலிருந்து எடுக்க முடியும். அங்கு வாழ முடியும். என்னற்ற நகரங்கள், சிற்றூர்கள், பாதைகள், பயணங்கள், மாந்தர்கள். ஒரு பெரும்…மிகப்பெரிய உலகை என்னுள் சிருஷ்டித்துள்ளது வெண்முரசு.